பாப்பிநாயக்கன்பட்டி ஸ்ரீகந்தசாமி வித்யாலயா பள்ளி மாணவர் பி.விக்னேஷ்: இரண்டு ஒரு மதிப்பெண் வினாக்கள் குழப்பமாக இருந்தன. 10 மதிப்பெண் வினாக்களை சாதாரண மாணவர்களும் எழுதியிருப்பர். ஆறு மதிப்பெண் வினாக்கள் கொஞ்சம் சிரமமாக இருந்தன. குறித்த காலத்தில் தேர்வை எழுதிவிட்டோம். பாடத்தின் வெளியில் இருந்து வினாக்கள் எதுவும் வரவில்லை. சாதாரண மாணவர்கள் 150 மதிப்பெண் பெறுவர். எனக்கு 195க்கு மேல் கிடைக்கும்.
கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்என்.ஆர்.ராஜா: கடந்த ஆண்டு 100 சதவீதம் எதிர்பாராத வினாக்கள் வந்திருந்தன. இந்த ஆண்டு 50 சதவீத வினாக்கள் எதிர்பாராதவைதான். மூன்று பாடங்களில் 10 மதிப்பெண் உள்ள 4 வினாக்கள் நேரடியாகவே கேட்கப்பட்டு இருந்தன. இதை அனைவரும் எழுதியிருப்பர். இரண்டாவது தொகுதியில் ஒரு வினாதான் (வளைவரை வரைதல்) எதிர்பார்த்தது கேட்கப்பட்டு இருந்தது. மற்றவை அனைத்தும் எதிர்பாராதவையே. வினாத்தாளை பொறுத்தவரை எளிதான வினாக்கள் என்றே கூற வேண்டும்.
No comments:
Post a Comment